3
கணிப்பொறி கலைஞன்
உணர்வில்லா உன்னுடன் ஓர் உணர்ச்சி போராட்டம்
-இப்படிக்கு பொறியி(யலி)ல் சிக்கிய கணிப்பொறி கலைஞன்.
கண்ணாடி கட்டிடம்
கண்ணாடி கட்டிடத்தின் பளபளப்பிற்கு காரணம் துடைக்கப்படும் தண்ணீர் மட்டும்,
அல்ல அங்கு வேலை பார்ப்பவர்களின் கண்ணீராகவும் இருக்கலாம்.
புதிராகிப்போனேன்
எனக்கு மட்டும் விரைவாக விடியும் காலை,
வெளிச்சமான இரவு,
இருள் சூழ்ந்த சூரியன்,
வாடிக்கைக்கு எதிர் திசையில் என் பயணம்,
அயல் நாட்டு நேரம் காட்டும் என் கடிகாரம்.
கண்டு பிடித்தீர்களா என்னை ?
ஆம் நான் தொலைந்து போன கார்ப்ரேட் கவி(லை)ஞன்.